Breaking

Monday, 30 July 2018

தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான சூழல் நிலவுகிறது

மிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க-வுக்கும் அதன் தலைவராக 50 ஆண்டுக்காலம் இருந்த மு.கருணாநிதிக்கும் தனியான, மிகப்பெரிய ஓர் அத்தியாயம் உண்டு.

 தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேறி அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கிய நாள்முதல், தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த தொண்டர்களும் அவ்விரு கட்சிகளின் நிர்வாகிகளும் எப்போதும் எதிரும் புதிருமாகவே இருந்து வருகின்றனர். அதிலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அதாவது 2016 டிசம்பர் வரை, அ.தி.மு.க - தி.மு.க-வினர் இடையேயான பரஸ்பர மோதல் மிகவும் உச்சத்தில் இருந்தது என்றே சொல்லலாம். ஒரே குடும்பத்தில் அண்ணன் அ.தி.மு.க-விலும், தம்பி அல்லது உறவினர்கள் தி.மு.க-விலும் உறுப்பினர்களாகவோ நிர்வாகிகளாகவோ இருந்தால், அவர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

 ஆனால் இப்பொழுது இந்த சூழல் மாறி வருகிறது.தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு உடனே தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் நேரடியாக கோபாலபுரம் இல்லத்துக்கே சென்று நலம் விசாரித்தார்.நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இதன் மூலம் தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான சூழல் நிலவி வருகிறது.

No comments:

Post a Comment