பொது அறிவிப்பு
October 01, 2018
சாரிடான் உள்ளிட்ட 328 வகை வலி நிவாரண மாத்திரைகளுக்கு தடை: மக்களே உஷார்
மக்களுக்கு நன்கு அறிமுகமான சாரிடான் உள்ளிட்ட 328 வகை வலி நிவாரண மருந்து, மாத்திரைகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், பல்வேறு நிறுவனங்களுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகளின் விற்பனை மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சாரிடான் போன்ற மருந்து, மாத்திரைகள், எப்.டி.சி. எனப்படும் பிக்சட் டோஸ் காம்பினேஷன் முறையில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள், குறிப்பிட்ட அளவில் இடம்பெற்றிருக்கும். இத்தகைய எப்.டி.சி. மருந்துகள், வலிகளில் இருந்து உண்மையாக நிவாரணம் அளிப்பதில்லை என்றும், போலி மருத்துவர்கள் அவற்றை பரிந்துரைப்பதால் அவை பாதுகாப்பானவை அல்ல என்றும் 2016, மார்ச் மாதத்தில், 344 வகை எப்டிசி மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
சாரிடான் போன்ற மருந்து, மாத்திரைகள், எப்.டி.சி. எனப்படும் பிக்சட் டோஸ் காம்பினேஷன் முறையில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள், குறிப்பிட்ட அளவில் இடம்பெற்றிருக்கும். இத்தகைய எப்.டி.சி. மருந்துகள், வலிகளில் இருந்து உண்மையாக நிவாரணம் அளிப்பதில்லை என்றும், போலி மருத்துவர்கள் அவற்றை பரிந்துரைப்பதால் அவை பாதுகாப்பானவை அல்ல என்றும் 2016, மார்ச் மாதத்தில், 344 வகை எப்டிசி மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.










